Monday, May 15, 2006

ஒரு மழைக்காட்டில்...


வார விடுமுறையோடு பொது விடுமுறையும் சேர்ந்து வந்தபோது நானும் நண்பர்களும்,எங்காவது வெளியே சுற்றிவர முடிவுசெய்தோம். எறக்குறைய எல்லா தீவுகளுக்கும் முன்னமே சென்றுவிட்டதால், இந்தமுறை கொஞ்சம் வீரதிரமாக காடுமலை ஏறலாம் என்று யோசித்து "தாமன் நெகரா"(Taman Negara) என்று முடிவுசெய்தோம்.

"தாமன் நெகரா". உலகில் உள்ள மிகப்பழமையான மழைகாடுகளில் ஒன்று(சுமார் 130 மீல்லியன் ஆண்டுகள் பழமையானதாம், அமேசான், காங்கோ இவைகளைவிட பழமையானது என்று சொல்கிறார்கள்). மலேசியாவில் பாஹாங் மாநிலத்தில் பெரும்பகுதியும்,அருகிலுள்ள இருமாநிலங்களில் சில பகுதிகளும் சேர்த்து ஏறக்குரைய 4343 சதுர கிலொமீட்டர் உள்ளடங்கிய காட்டுப்பகுதி.

"புறப்பாடு".பத்து நண்பர்கள் கொண்ட எங்கள் குழு, இந்தியத்துனைக்கன்டத்தின் பல்வேறு மாநிலத்திலிருந்து வந்து மலேசியாவில் கணினித்துறையில் வேலைச்செய்பவர்கள். தேசிகன் -தொப்பிகளின்மேல் திராக்காதல் கொண்ட எங்களின் எல்லா மொழிகளிலும் பேசக்கூடிய குழுத்தலைவன். பிரஜேஷ் - ஆரம்பத்திலிருந்தே மிகுந்தார்வத்துடன் எல்லா முன்னேற்பாடுகளும் செய்தவன்,மிகப்பெரிய விடயங்களையும் மிகச்சாதாரணமாக சொல்லுபவன். கௌரி - எளிதில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவன், ஆண்டு அனுபிவத்த அனுபவஸ்த்தனைப்போல பேசுபவன். சுஷில்,பிந்தியா - புதிதாய் திருமணமான இளம் ஜோடி, எந்தவிதமான வித்தியாசம் பாராட்டாமல் எங்களோடு கலகலப்பாக பயணித்தார்கள் (மற்றும் அவர்களுக்கே உரிய ..விஷயங்களோடும்). ரஞ்சித் - திருமணமான கலகலப்பான பேர்விழி, நிறைய நகைச்சுவை துணுக்கூகளோடு கூட்டதையே கலகலப்பாக்கிகொண்டு வந்தார். சிவா - பார்பதற்கு முரடாக பழகுவதற்கு இனிமையானவன். வினாயக் - சிங்கபூரிலிருந்து வந்து எங்களோடு கலந்துகொண்ட சிவாவின் நண்பன் மற்றும் நான்."முதல் பகல்". காலை அனைவரும் கோலாலம்பூர் "ஹோடெல் மலயா" முன் கூடினோம். இங்கிருந்துதான் எங்கள் பேருந்து புறப்படுவதாக ஏற்ப்பாடு. இந்தியர்களுக்கே உரித்தான் வழக்கதில், பேருந்து புறப்படும்போது நிறுத்த சொல்லிவிட்டு காலைவுணவுக்காக அலைந்தோம் அன்று விடுமுறைதினம் ஆதலால் கடைகள் எல்லாம் முடியிருந்தது.பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு ஒருக்கடை கண்டுப்பிடுத்து, தமாதமானதால் கிடைத்த ரொட்டியை "பொங்கூஷ்" (பார்சல்) செய்துக்கொண்டு புறப்பட்டோம்.எங்களோடு இந்தியாவிலிருந்து வந்து இங்கு வேலைச்செய்யும் மற்றோருக்குழு, சில சினர்கள், மற்றும் பிறத்தேசத்தினரும் பேருந்தில் இருந்தனர். பயனநேரத்தை கழிப்பதற்காக "தம்ஷ்ரத்ஸ்" விளையாட அரம்பித்தோம்(என்னைத்தவிர அனைவருக்கும் இந்தி தெரியும் ஆதலால் பொதுவாக இந்தியிலே இருந்தது எங்கள் உரையாடல்). என்முறை வந்தது, காதில் ஒரு இந்திப்படத்தின் பெயர் சொல்லப்பட்டது, என்க்குத்தெரிந்த அரைக்குறை இந்தியைவைத்துக்கொண்டு அபினயம்பிடிக்கத்தெரியாமல் முழித்தேன், என்முழிப்பைபார்த்து எதோ புரிந்து கொண்டு பிரஜேஷ் வரிசையாக படங்களின் பெயர் சொல்ல நல்லவேளையாக அதில் ஒன்று என் காதில் சொன்னப்பெயர்.நிம்மதியாக வந்து இருக்கையில் அமர்தேன். இப்படியாக சிரிப்பூம், சத்தமாயிருந்த எங்கள் விளையாட்டு ஓட்டுனருக்கு எரிச்சல் மூட்டியதால் அனைவரும் தூங்குவதற்கு நிற்பந்திக்கப்பட்டோம். சுமார் 4மணிநேர பயணத்துக்குப்பிறகு "கோலா டெம்லீங்" படகுத்துறைக்கு வந்துசேர்ந்தோம். இங்கிருந்துதான் படகு எடுத்துகொண்டு தாமன் நெகரா செல்லவேண்டும். நாங்கள் ஒருமரப்படகை வாடகைக்கு அமர்த்திகொண்டோ ம், தகரவொடுகள் வேயப்பட்டு சற்று நிளமாக இருபதுபேர்களுக்குமேல் அமரக்கூடியதால் எங்களோடுப்பேருந்தில் பயணம்ச்செய்த மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டோ ம். அப்படகின் பின்புறமிருந்த சிலாயிரம் குதிரைச்சக்திக்கொண்ட யமாகா மோட்டார் இயக்கம் பெற்றதும் அந்தக்காட்டாறின் நீரோட்டத்தை எதிர்த்து பயணப்பட்டோம். சில சிறுக்கட்டடங்களை கடந்தப்பிறகு நீரோட்டத்தின் இருபுறமும் பச்சைப்பசேலென்று அடர்த்தியான மரங்கள், பறந்தப்படியே இரைத்தேடும் சிறியப்பறவைகள், ஆற்றைக்கடக்கும் மாடுகள்,கரையோரத்தில் இடுக்கியக்கண்களோடு கிராமத்து மனிதர்கள்.இந்த அழகியக்காட்சியை உள்வாங்கியப்படியேருந்த எங்கள் கனத்தமௌனத்தை திடிரண்டு
ஷமிகின் குரல்............

7 comments:

Pot"tea" kadai said...

interesting...

Photos please!!!

பட்டணத்து ராசா said...

pot"tea" thanks for coming to my page. i have just updated with one photo. soon upload some more pictures too

இயற்கை நேசி|Oruni said...

Sounds like very interesting trip...

same thing like Pot'tea' said, more photoes if u have any..

Nesi.

மாயவரத்தான்... said...

ஜெயலலிதா வாழ்க! மாயவரத்தில் அதிமுக தொண்டர்களுக்காக விருந்து வைத்த எங்கள் அம்மா வாழ்க!

பட்டணத்து ராசா said...

*இயற்கை நேசி* thanks for coming to my page. uploaded some photos

Anonymous said...

இயல்பான எழுத்தில் பயண கட்டுரை.
இரண்டாம்பாகத்தை எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

பட்டணத்து ராசா said...

உங்க ஊக்கத்துக்கு நன்றி துபாய ராஜா, சிக்கிரமே எழுதிடுவோம்.