Sunday, May 07, 2006

ஸ்ரீலஸ்ரீ வலபதிவுவாசி சைபரானந்தா பேட்டி

கல்கொத்தாவில் இருந்து சென்னை வந்து புதிதாக வலைப்பதிவு ஆசிரமம் அமைக்கவிருக்கும் ஸ்ரீலஸ்ரீ வலபதிவுவாசி சைபரானந்தாவை தீடிர் ரிப்போட்டர் பட்டணத்து ராசா கண்ட கேட்ட பேட்டி( செவ்வின்னு சொல்ராங்கலே இதைத்தானோ?).

வலைபதிவு, அரசியல், பெண்ணீயம் ஆசிரம செயல்ப்பாடுகள் இப்படி பலதரபட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட முகம் கோனாமல் ( இப்பவே பார்கக சகிக்கீல) பதிலளித்த சைபரானந்தாவின் பேட்டி.

ப.ரா : நீங்க சென்னை தேர்வு செய்த நோக்கம் ?

ஸ்ரீலஸ்ரீ : கல்கொத்தாவில் முதல் அமைச்சர் 80 ஆயரம், சோனியா 7 கோடின்னு சொத்து கனக்கு காட்ட, தமிழகத்தில மட்டும் ஆளுங்கட்சி, எதிரணி இரண்டுமே 20 கோடிக்கு மேல. இங்க ரீஸோஸ் ( resource pool) அதிகம் சாமி அதான்.

ப.ரா : அது அரசியல் அதுக்கும் ஆசிரமத்துக்கும் என் சம்பந்தம்?

ஸ்ரீலஸ்ரீ : ம்.. எல்லா இடத்திலும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறது அரசியல் தாம்.

ப.ரா : அது என்ன வலைபதிவு ஆசிரமம் ? (மாட்டிக்கிட்டா ஈசியா எஸ்கேப்)

ஸ்ரீலஸ்ரீ : ம் எங்கள் செயல்பாடுகளை பாருங்கள் அதன் அவசியம் புரியும்.

ப.ரா : கடவுள் மறுப்பு ஆட்களிடம் திருவிளையாடல் தருமி மாதிரி நிறைய கேள்வி வருமே?

ஸ்ரீலஸ்ரீ : நாங்க கேட்ட்பதைதான் நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால நாங்கள் சொல்லுவதை சொல்ல மறுக்கிறீர்கள் அப்படின்னு அதாவது குன்சாவா சொல்ல வேண்டியதுதான்.

ப.ரா : திரவிட ராஸ்கள் நிறைய இருகாங்களே?

ஸ்ரீலஸ்ரீ : டிவி பார்க்கும் பெரும்பான்மை மக்களுக்கு கலர் டிவி, இன்டர்நெட் பார்க்கும் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லையே அப்படி எதையாவது சொல்லி கூட்டம் சேக்க வேண்டியது தான்.

ப.ரா : ம் தெளிவாத்தாம் இருக்கிங்க சாமி. அது சரி பெண்ணீயம்?

ஸ்ரீலஸ்ரீ : மற்ற துறைகளை விட ஆன்மிகம் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளது அதிக எண்ணிக்கை உள்ள பெண் சாமியார்களே அதற்கு சாட்சி. இங்கே கூட ஒரு அம்மா ஒரு மடம் ( மாடமா) வச்சு இருக்காங்களே ( அவங்க வைர கீரிடம் பார்த்து தான் நானே வலைபதிவு ஆசிரமம் தொடங்குறேன்.)

ப.ரா : சரி இப்போ ஆசிரம பணிகள் என்ன நடக்கின்றன?

ஸ்ரீலஸ்ரீ : பாசீச, மார்கிசிய, முன் பின் நவினத்துவ அப்படிங்கற வார்ததைகளுக்கு ஒரு டீம்மும், குன்சா, கவிஜ, அறிக்கை ங்கற வார்ததைகளுக்கு ஒரு டீம்மும் அமைச்சு ரிகர்சல் பார்த்துகிட்டு இருக்கோம். அப்புறம் இந்த "முன்முடிவு" வார்ததை மட்டும் நான் நான் மட்டுமே.

ப.ரா : உங்கள மாதிரி அறிவில் சிறந்த ஞானிகள் இப்படி பண்ணலாமா?

ஸ்ரீலஸ்ரீ : தம்பி இப்ப கேட்டிங்ளே ஒரு கேள்வி அத எங்க ஊர்ல தலையுல செருப்பு தூக்கி வக்கிறதுன்னு சொல்லுவாங்க. சரி நான் வரேன் ஆசிரம பணிகள் நிறைய கிடக்குது.

ப.ரா : வாங்க உங்க பணி சிரக்கட்டும், நன்றிகள்.

1 comment:

Anonymous said...

ரொமபத் தேவை