Saturday, May 06, 2006

மீண்டும் கவிஜ

பார்ரா என்னத்தான் சகவலபதிவாளர்கள் விமர்சனம் செய்தாலும் சிலருக்கு அடங்காம கவிஜ பொங்கி பொங்கி வருது அடங்க கொஞ்ச நாள் ஆகும் பொருத்துக்குங்க மக்களே.

சுவற்றின் நெற்றியில்
ஆணி அடிக்கப்பட்டது
இயேசுவின் படத்தை
மாட்டுவதற்காக.

(ராசா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேடா..)
அப்புறம் இந்த கவிஜ க்கும் நட்சத்திர பதிவாளர் சரி சரி சூப்பர் ஸ்டார் பதிவாளர் (கழக தளபதி, கொ.ப.செ எல்லாம் வந்து அடிய போட்டுடப் போறாங்க) முத்திவின் "அந்த" பதிவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்ல இல்ல ஏன்னா இது சுட்டது :)

10 comments:

Muthu said...

நெற்றியில்
ஆணி
அடிக்கப்பட்டது
இயேசுவின்
படத்தை
மாட்டுவதற்காக.
சுவற்றின்

ஹி..ஹி வரிகளை மாற்றி போட்டுப்பார்த்தேன்.எப்படி பார்த்தாலும் இது கவிஜ தான்...

Pot"tea" kadai said...

அன்று ஆணி
அடிக்கப்பட்டது
சிலுவையில் இயேசுவை
அறைவதற்காக

இன்றும் ஆணி
அடிக்கப்பட்டது
சுவற்றில் இயேசுவை
மாட்டுவதற்காக

நானும் உள்ளேன் ஐயா.

பட்டணத்து ராசா said...

உங்க ஊக்கத்துக்கு நன்றி முத்து :))

பட்டணத்து ராசா said...

பொட்டீ நம்ம பக்கத்த எட்டி பார்த்தற்கு நன்றி :-)

நாமக்கல் சிபி said...

ஆணி அடித்து
மாட்டப்பட்டது
இயேசுவின் படம்
சுவற்றில்!

பட்டணத்து ராசா said...

நாமக்கல் சிபி நம்ம பக்கத்த எட்டி பார்த்தற்கு நன்றி :-)

சந்தர் said...

சுண்ணாம்பு உதிர
அறைந்தனர் ஆணியை
சுவரில் தொங்கியது
ஏசுவின் படம்.

இது எப்படி இருக்கு?

பட்டணத்து ராசா said...

chandar kalakkuthu,நம்ம பக்கத்த எட்டி பார்த்தற்கு நன்றி :-)

பொன்ஸ்~~Poorna said...

ராசா, உங்க பக்கத்தை எட்டிப் பார்க்க மட்டும் தான் முடியுமா?? :)

பட்டணத்து ராசா said...

//ராசா, உங்க பக்கத்தை எட்டிப் பார்க்க மட்டும் தான் முடியுமா?? :)
//
பின்னூட்டமும் போடலாமே.