Wednesday, May 03, 2006

கவிதை எதிர்ப்பு.

சமிபகாலமாக நட்சித்திர பதிவாளர்கள் பதிவுகளில் ஆரம்ப பதிவாளர்களின் கவிஜ புனையும் பதிவுகள் குறித்த பாசிச தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இவர்களுடன் முன்னாள நட்சித்திரங்களும், சிலகாலமாகவே பதிவுகளின் முலம் இலக்கிய பணியாற்றிவரும் (அவ்வாறு நினைத்துகொள்ளும்) அறிவுஜிவி பதிவாளர்களும் அடக்கம். இவர்களின் இந்த தலைகேரிய வெறி அப்ப பதிவுகளின் பின்னுட்டங்களில் விரவிக்கிடக்கின்றன.அவர்களுக்கு பலவினமான எதிர்பையாவது பதிவு செய்யவே இந்த பதிவு.

இந்த முலையிலே கிள்ளி எறியும் முயற்சியை பொருட்படுத்தாமல் கவிஜ புனைபவர்கள அயராது வார்தைகளை மடக்கி மடக்கி முடிந்தால் எழுத்துகளையும் பிரித்து பிரித்து போட்டு புனைவதை நிறுத்தாமல் தொடருமாறு கேட்டுகொள்கிறேன்(அப்படி எழுதுனத நூறு தடவை படிக்கிபோறது நாம மட்டும் தானே).

8 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இணைய தள பதிவுகள் என்பது நாம் நம்முடைய கருத்துக்களை அது எப்படிப்பட்ட கருத்துக்களாக இருந்தாலும், முட்டாள்தனமான, மூடத்தனமாக இருந்தாலும் வெளி இடுவதற்காகவே. காசு கொடுத்து சினிமா பார்த்து, காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிப்பது ஒரு எதிர்பார்ப்பில் ஆனால் இணைய தள பதிவுகளில் எழுதப்படும் பதிவுகள் தோன்றுவதை எழுதும் முயற்சி இதில் ஆக்கப்பூர்வமாக மாற்றுக் கருத்துக்களை சொல்லாமல் மற்றவர்களை தாழ்வுறச் செய்யும் வகையில் கருத்துக்களை வெளி இடுவது மற்றவர்களை காயப் படுத்தும் விதமாக உள்ளது.

இந்தப் பதிவை வெளியிட்டு அந்த கருத்தை சொல்ல முயன்றதற்காக வாழ்த்துக்கள்.

Muthu said...

மொதல்ல எழுத்துப்பிழை இல்லாம டைப் பண்ணு...

Muthu said...

நவீனக்கவிதை தளைகளிலிருந்து திமிறி எழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்:)))

Muthu said...

ராசா,

கவிஞ்ஞா, கிண்டல் தான் ..டென்சன் ஆயிட வேண்டாம்.

பட்டணத்து ராசா said...

இந்த மாதிரி கிண்டல்கள் தொடரந்தாலும், எழுத்தி பிழைகளோடு தொடரும் என்ன் முட்டாள்தனமான, மூடத்தனமாக ஊளரல்கள் :-))

பட்டணத்து ராசா said...

//மொதல்ல எழுத்துப்பிழை இல்லாம டைப் பண்ணு...//

அப்படியே எங்க எங்க பிழை சொன்னா திறுத்திப்போம் இல்ல :-)

ilavanji said...

பட்டணத்து ராசா!

//அப்படியே எங்க எங்க பிழை சொன்னா திறுத்திப்போம் இல்ல :-) //

தெரிஞ்சா சொல்ல மாட்டமா? அது தெரியாதனாலதான எங்களால முடிஞ்சதுன்னு கவுஜையை எதிர்க்கறோம்!


சரி.. சரி.. திறுத்திப்போம் = திருத்திப்போம்

:)

பட்டணத்து ராசா said...

திறுத்தினதுக்கு சாரி திருத்தினதுக்கு நன்றி :-)