Friday, June 30, 2006

And We Had Talk....

I'd travel to the ends of time
For you, my one, my only love.
I'd force the sun to leave its track
(If you were lost) to fetch you back.
I'd suck the juices from a lime,
I'd re-write Moby Dick in rhyme,
I'd happily commit a crime!
For you, my dearest darling dove.
I'd do it all, and more beside --

Now *would* you take the trash outside?
.
.
.
.
.
.
I've taken the trash out innumerable times,
I've taken the trash out in inclement climes,
I've taken the trash out 'cuz that's what I do,
But I *won't* take the trash out when you tell me to do.

Monday, June 26, 2006

மொழியும் அறிவும் - பெரியார்

மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல அது இயற்கையானதும் அல்ல அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.

மொழி, மனிதனுக்குக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு-விஷயங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதேயொழிய பற்றுக்கொள்ளுமளவிற்கு அவசியமானதல்ல.

மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொதுவாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டுதான் நாம் நமக்கு எந்த மொழி வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

நமக்குச் சொந்த மொழி என்பது - பிறந்த சாதியின் காரணமாக எனக்குக் கன்னடம் சிலருக்குத் தெலுங்கு பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் நாட்டுக்கு உரியது தமிழ்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு - தமிழ்நாட்டைப் பற்றி நினைத்துக்கொண்டு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும், போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது தமிழ்மொழி என்பதாகத் தான் தோன்றும். அது ஓரளவிற்கு நியாயமாகும். ஆனால், நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர்களல்லாத அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால், அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கு, வசதிக்கும் ஏற்றபடி ஏதேதோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு, அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பதுதான் ஆட்சி மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் கூடி இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது. இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதான சம்பவமுமாகும்.

இந்த நாட்டில் மேற்கண்டபடி இந்தி மொழி கட்டாய பாடமாக்கப் (மொழியாக்க) படவேண்டும் என்பதற்கு அரசாங்கமும், இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், அவர்களின் அருளால் பிழைக்கவேண்டும் என்ற நிலையிலுள்ள பெரும்பாலோரும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இந்தியைப் புகுத்தவும் கட்டாயப்படுத்தவும் இவைகளுக்காகத் தந்திரமான பல வழிகளைக் கோலவும் துணிந்து முன்வந்திருக்கிறார்கள்.

அதுபோலவே, தமிழ்மொழியை அரசியல் மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் இன்னும் இலக்கிய மொழியாகவும் இருக்க வேண்டுமென்று தமிழர்களிடையே அரசியல்வாதிகள் என்போர்களும், மற்றும் புலவர்களும் இலக்கிய வாழ்வுக்காரர்களும், மற்றும் மொழிப்பற்று என்பதை சமயப் பற்றுபோல் முக்கிய பற்று என்று கருதுகின்றவர்களும் வலியுறுத்துகிறார்கள். கிளர்ச்சி வயப்பட்டவர்கள் இதற்காகக் கிளர்ச்சிகளும் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு மொழிகள் பற்றியும் கவலையில்லை பிடிவாதமுமில்லை. இவற்றுள் இந்தி எந்த வகையிலும் நமக்குத் தேவையில்லை என்பதோடு கண்டிப்பாக நம் நாட்டிற்குள்ளே இந்தியைப் புகவே விடக்கூடாது என்பது எனது கருத்தாகும். எந்தத் துறையில் நமது நாட்டிற்குள் இந்தி புகுந்தாலும், சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்கு வந்து தொல்லையும் மடமையும் இழிவும் அனுபவிக்கிறார்களோ, சற்றேக் குறைய அந்த நிலைமைக்குத்தான் நம்மைக் கொண்டுபோய்விடும் என்பது எனது துணிபு. இந்தி, தமிழ் நாட்டையும் தமிழனையும் வட நாட்டானுக்கு-பார்ப்பனருக்கு அடிமைப்படுத்துவதல்லாமல் வேறு எந்த காரியத்திற்கும் பயன்படாது.

இந்தி ஆட்சிமொழியாய் இருக்கிறதெ என்றால், நாம் உலகம் உள்ள அளவும் வட நாட்டானுக்கு அடிமை ஆக இருப்பது என்று முடிவு செய்துகொண்டோமா? தமிழ் நாடு ஒரு நாளைக்கும் அன்னியன் ஆதிக்கம் இல்லாத சுதந்திர நாடாக இருக்கக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலையா? அப்படி இல்லை என்றால், இன்றைய அன்னிய நாட்டான் ஆதிக்க ஆட்சியைத் தற்கால (தற்காலிக) ஆட்சி என்றுதானே சொல்ல வேண்டும்?

மற்றும் இந்திமொழி, கலாசாலை போதனைக்கோ, இலக்கிய போதனைக்கோ, ஆட்சிமுறை போதனைக்கோ வேறுமொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்த்து நம் நாட்டிற்குள் புகுத்த வேண்டிய அளவில்தான் இருக்கிறதே தவிர-மற்றபடி மூல நிதி (பொக்கிஷம்) அதில் என்ன இருக்கிறது? இன்று சட்ட அறிவோ, கலை அறிவோ, பொறியியல் அறிவோ, வைத்திய அறிவோ, விஞ்ஞான அறிவோ அளிக்கத்தக்க நேரிடைச் சாதனம் இந்திக்கு என்ன இருக்கிறது?

நிற்க, தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரம் இல்லை.

தமிழனுக்கு அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை மாத்திரமல்லாமல், தமிழனுக்கு என்று - ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது, ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம் விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது அருமையாகத்தான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பலனைக் கொடுத்திருக்கிறது? விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத் தக்கதாய் இல்லை அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை. தமிழ்மொழி ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் இன்னும் - இந்த விஞ்ஞானப் பரவல் காலத்திலும் உலகில் எங்கும் இல்லாத அளவு மூட நம்பிக்கை உடையவனாகவும், மான உணர்ச்சி என்பது 100-க்கு 75 பாகம் இல்லாதவனாகவும் இருந்துவருகிறான். மனித வாழ்விற்கு மொழி முக்கியம் என்றால் - உலகில் மற்ற மொழி நாடுகளைக் காணும்போது தமிழ் நாட்டுக்குத் தமிழ் என்ன பயன் அளித்திருக்கிறது?

தமிழை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் கலைத்துறையிலோ, விஞ்ஞானத் துறையிலோ, மற்றும் சில துறைகளிலோ வேறு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்கின்ற நிலைதானே தமிழுக்கு இருந்து வருகிறது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில் ஆகட்டும், பொருளிலாகட்டும், எழுத்திலாகட்டும், வேறு முறைகளிலாகட்டும் எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே நீதி சிறந்த இலக்கியம் - குறள் தமிழில் உள்ளது. அது துருப்பிடித்துவிட்டது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலே சிறந்த துறை அறிவு தமிழிலுள்ள கணக்குமுறை, அதாவது இளஞ்சுவடி என்றும் எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை. அது குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் இருந்து - தமிழன் தெரிந்துகொள்ளத் தக்கதோ தமிழனுக்குப் பயன்படக் கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன.

தமிழனின் பேச்சுமொழி, தாய்மொழி-தமிழ் என்பதைத் தவிர, தமிழருக்கு வேறு உலக முக்கியத்துவம் எதுவும் எனக்குத் தென்படவில்லை. மற்றபடி, தமிழ் நாட்டிற்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது - நல்லது அரசியல், விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது - பயன்படக்கூடியது என்று என்னைக் கேட்டால் - எனக்கு, ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. இது எனக்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னமேயே தோன்றிய எண்ணமாகும்.

நான் 1939-ல் கோவைக் கல்லூரியில் அதன் பிரின்ஸிபாலின் தலைமையின் கீழ் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும்போது எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அந்தச் சமயம் நான் இந்தி எதிர்ப்புக்காக சிறைசென்று - சிறையினின்று விடுதலையாகி வந்த பிறகு, கல்லூரி மாணவர்களால் அழைக்கப்பட்டு "மொழி" என்னும் தலைப்பில் பேசிய பேச்சில் குறிப்பிட்டுருக்கிறேன். அந்தத் தலைப்பில் மொழியின் பயன் என்ன? பயனுக்கேற்ற மொழி எது? என்று 2 பிரிவுகளாய்ப் பிரித்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சில் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கணக்காக - அகர வரிசையாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக்கொள்ளலாமென்றும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சுமொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரகளும் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்றும் பேசினார் பிறகு நான் பேசும்போதும் அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன். அதே சமயம் இப்படி நான் சொல்வதால், மொழி வெறியர்கள் சிலர் என்னை, "நீ யாருக்குப் பிறந்தாய்?" என்றுகூடக் கேட்டார்கள். "அந்த மொழியைப் பேச வேண்டும் என்று சொல்வதானால் நாம் ஆங்கிலேயனுக்குப் பிறப்பதானால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு இரயில், ரேடியோ, ஆகாய விமானம், டெலிபோன், மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து தெரிந்து அனுபவிக்கிற நாம் எத்தனை தடவை ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களாவோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதானால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாகமாட்டோம்" என்று சொன்னேன். தமிழரின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம், தமிழ்ப் பண்பாடு மூலமோ நாம் உலக மக்களின் முன்னிலையில் ஒருநாளும் இருக்க முடியாது.

தமிழ் வடமொழியைவிட இந்தி மொழியைவிடச் சிறந்தது என்பதிலும், பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலம் நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்

Wednesday, June 21, 2006

நீதி எனப்படுவது

இரண்டாவது உலக யுத்த சமயத்தில், மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கினார். யுத்தத்தை எதிர்த்து ஒருவர் பொது இடத்தில் பிரச்சாரம் செய்வார். அவரைக் கைது செய்து சிறையிலடைத்தாலும், வன்முறை எதிலும் ஈடுபடாத காரணத்தினால்
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளி வந்து மீண்டும் பிரச்சாரம் செய்வார். இதைத் தவிர்ப்பதற்காக அன்றைய ஆங்கிலேய அரசு, இவ்வாறு கைதானவர்கள் ஜாமீனில் வெளிவராமல் தடுக்க 'Criminal law amendment act' ஐ அறிமுகப்படுத்தியது.
இன்றைக்கும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருவது யாரை ஒடுக்க ?...

அடிப்படையில் ஆங்கிலேய காலத்துச் சட்டத்தைச் சார்ந்திருந்தாலும், நமது சட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நலம் சார்ந்த சட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பின்பே உருவாக்கப்பட்டவை. அப்பொழுதெல்லாம் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுக்
கடுங்காவல் தண்டனை. வ. உ.சி. க்கு விதிக்கப்பட்ட இரண்டு ஜென்ம தண்டனை என்பது நாற்பது வருட கடுங்காவல் தண்டனையே ஆகும். இப்பொழுது ஆயுள் தண்டனை பதினான்கு
ஆண்டு சிறை வாசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. சாட்டையடி போன்ற ஈவிரக்கமற்ற தண்டனைகளும் ஒழிக்கப்பட்டு விட்டன. சர்வசாதாரணமாய்ப் புழங்கிக் கொண்டிருந்த தூக்கு தண்டனை இப்பொழுது மிகவும் அரிய குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. (ஆனால், இன்னமும் எடுத்ததற்கெல்லாம் தூக்குதண்டனை கொடுத்து அதை ஒரு கேலிப் பொருளாக
மாற்றிய, மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை திரைப்படங்களுக்கு உண்டு) அப்படியும் மக்கள் நம்பிக்கையை நீதிமன்றங்கள் இழந்து வருகின்றன. மேம்படுத்துதல் நடைபெறாத எந்தத் துறையும் ஒட்டடை படிந்தே காணப்படும். இன்றைய நீதித்துறை, வழக்குகளை
விசாரிக்க ஏற்படுத்தும் காலதாமதம் எதனால் ஏற்படுகிறது?

சாதாரணமாகக் கொலை வழக்குகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் போன்றவை துரிதமாக நடைபெறும். (அப்படியும் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' முடிவதற்குள் இரு தேர்தல் காலம் முடிவடைந்து விட்டது). சாதாரண வழக்குகள் சவ்வு
போல இழுத்துக்கொண்டே போகும். சாதாரணமாக ஒரு பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட வழக்கு முடிவதற்குப் பத்து ஆண்டுகளாகின்றன.

இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள்
இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின்
அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து 'எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை' எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். 'வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ, 'வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி 'வாய்தா' க்கள் வாங்கலாம்.

நீதிமன்றம் தொடங்கிப் பத்தரை மணி முதல் பன்னிரெண்டரை மணி வரை இரண்டு மணி நேரம் நீதிபதி வழக்கு எண் போடுதல், தேதி கொடுத்தல் போன்ற பணிகளுக்கே சரியாகப் போய் விடுகிறது. இது போன்ற நிர்வாகப்பணிகள் நீதிபதியின் பொறுப்பிலிருந்து அகற்றப்பட
வேண்டும். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தல் என்பது மட்டுமே நீதிபதியின் பணியாக இருக்க வேண்டும்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழக்குத் தொடங்குவதற்கு ஒரு மாத கால அவகாசமும், முடிவதற்கு ஓராண்டு கால அவகாசமும் மட்டுமே தரப்படுகின்றன. வழக்கில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகவில்லையெனில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்குகள் தூரிதமாக நடைபெற மக்கள் நீதிமன்றங்கள் என்றழைக்கப்பட்ட 'லோக் அதாலத்' அறிமுகப்படுத்தப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், இரு தரப்பினரும் விரும்பினால்
மட்டுமே வழக்கினை 'லோக் அதாலத்தில்' நடத்த முடியும். இதனால் பெரும்பாலான வழக்குகள் வழக்கமான நீதிமன்றங்களிலேயே நடைபெறுகின்றன.

நவீன விஞ்ஞான வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதது நீதித்துறை பற்றிய மற்றொரு குறையாகும். இந்திய சாட்சிய சட்டம் (Indian evidence act) மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது. ஜெராக்ஸ் பிரதிகளை எதிர்த்தரப்பு ஒப்புதல்
கொடுத்தால் மட்டுமே நீதிமன்றம் சாட்சியமாக அங்கீகரிக்கும். விடியோ பதிவுகள் போன்றவை இரண்டாம் தர சாட்சியமாகக் கருதப்படுமே தவிர முதன்மை சாட்சியாக (Primary evidence) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. தீர்ப்பு நகல்களை நீதிமன்றத்திலிருந்து பெறுவதற்கே கூட சில நேரங்களில் ஏழெட்டு மாதங்களாகி விடுகின்றன.

D.T.P. போன்ற நவீன வசதிகளை உபயோகப்படுத்தினால் உத்தரவு நகல்கள் ஓரிரு வாரங்களில் தயாராகிவிடும். உயர்நீதிமன்றத்தில் பெயில் கொடுப்பதற்கு அச்சடிக்கப்பட்ட
'format' உபயோகப்படுத்துகிறார்கள். அதை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்கலாம்.

நீதிமன்றத்தில் உடனடியாகக் களைந்தெறியப்பட வேண்டியவைகளில் முதன்மையானது ஊழல். உச்ச நீதிமன்றத்திலிருந்து பெஞ்ச் நீதிமன்றம் வரை ஊழல் என்பது தலைவிரித்தாடுகிறது. நீதிபதியின் தேர்வுக்கு அவரது குணத்தை விட செல்வாக்கே கருத்தில்
கொள்ளப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித
நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல்
நகைச்சுவையாகிவிட்டது.

மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட எந்தவொரு சமுதாய அரசியலமைப்பும் தனது குறைகளை நிவர்த்தி செய்தபடி மேலும் மேலும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும்.
அரசியலமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாத இந்திய அரசாங்கம், சில விஷயங்களில் எவ்வளவு வேகமாய்ச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்குப் பஞ்சாப் தீவிரவாதிகளின் நவீன ஆயுதங்களை
எதிர்கொள்ள அம் மாநிலக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட ஸ்டென் துப்பாக்கிகள் இன்று எல்லா மாநிலக் காவல்துறையினர் கைகளிலும் காணக் கிடைக்கிறது!

ரப்பர், பிளாஸ்டிக் குண்டுகள், தண்ணீர் பீரங்கி என்று பொதுமக்களிடையே அதிகம் சேதத்தை, உயிர்ப்பலியை ஏற்படுத்தாத ஆயுதங்களை வெளிநாட்டுக் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, இங்கிலாந்து இறக்குமதிச் சட்டங்களை இன்னமும் கடைப்பிடித்துக்
கொண்டிருக்கும் நாம், பொதுமக்களுக்கெதிராகக் காவல்துறையினர் கையாளும் வன்முறை ஆயுதங்களுக்கு மட்டும் இன்னமும் விடை கொடுக்காமல் இருப்பது வன்முறைக்கு மேலும் வித்திடுவதாய் அமையாதா?

Tuesday, June 13, 2006

இவர்களுக்கும் ஒரு ஜாதி Please..

தெருவோரம் கம்பி மேல நடந்து, ஆட்டம் ஆடி, பல்டி அடிச்சி வேடிக்கை காட்டி வாழ்கை நடத்துகின்ற அந்த மக்களை கவனிச்சிருக்கிங்களா? இல்லைன்னா உங்க வீட்டு வாண்டுகளை
கேட்டுப்பாறுங்க தெரியும். மக்கள் வேடிக்கை பார்த்து கைத்தட்டி கொடுக்கும் சன்மானம் தான் அவர்கள் வருமானம்.

எங்கிருந்து வந்தோம், எங்கு வாழ்வதுன்னு தெரியாத அவலநிலை இவர்களுடையது.நினைவு தெரிந்த காலம் முதல் இவர்கள் இப்படிதான், இவர்கள் முன்னோர்களும் தெரு கூத்தாடிகள்தான்.

கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டிடுகளா தமிழகத்தில ஊர் ஊராக சுற்றி கூத்தாடி வருகின்றனர். சென்ற ஊரே சொந்த ஊர் இன்பமோ துன்பமோ இறப்போ, பிறப்போ பயணங்கள் நிற்பதில்லை இறந்தால் அங்கேயே புதைத்து விட்டு அடுத்த வேலை உணவுக்காக
தொடரும் பயணம்.

சில வருடங்களுக்கு முன் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தனர். எம்.ஜி.ஆர் காலத்தில இவர்களுக்கு இந்த நிலங்களை பட்டாமனைகளா வழங்கப்பட்டன. அதிக குழந்தைகள் இருந்தால் அதிக வருமானம். குலத்தொழிலுக்காக
முளையிலேயே கிள்ளி எறியப்படுகிற கல்வி.

அப்படியே விதிவிலக்காக படிக்கிற பிள்ளைகள் கூட மேற்கல்வி தொடர முடிவிதில்லை காரணம் இவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஜாதி இல்லை.

ஜாதி ஒழிக்க விவாதிங்கள் போராடுங்கள், ஆனா அதுவரைக்கு இவர்களுக்கும் ஒரு ஜாதி Please.. ஏன்னா ஜாதி இல்லையேல் கல்வி இல்லை என்பது சமுதாயத்தின் நிலை.

Wednesday, June 07, 2006

சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்


நான் யார் என்று சொல்லாமல்
நீ யார் என்று கேட்காமல்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

அவன் இவன் உவன்
யாரைப்பற்றியும் தெரிந்துக்கொள்ளாமல்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

எரியும் கூரையின் மேல் நிலவு
படத்தை வெறுக்காமலும் ரசிக்காமலும்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

நீண்ட வாக்கியம் படித்தாலும்
துளி தேன் ருசித்தாலும்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

நீ பார்த்த பார்வையும்
போன பின்பிருந்த வெற்றிடத்தை
பார்த்தால் மட்டும்.

Monday, June 05, 2006

குரங்கு கேட்கிறது - விந்தன்

'மனம் ஒரு குரங்கு' என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை. ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லி கொள்கிறீர்கள். அதற்கென்றே 'டார்வின் சித்தாந்தம்' என்று ஒரு தனி சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு பெருமையாகக் கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் 'பகுத்தறிவு' எங்களுக்கு இல்லாமல் இருப்பதுதானோ என்னவோ?

இராம-இராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன! கடவுளரைக் குறிக்கும் விக்ரகங்களை வேண்டுமானால் நீங்கள் 'நைவேத்தியம்' என்ற பேரால் பழம், பட்சணம் வைத்து வணங்குவீர்கள் - அவற்றை எடுத்து அவை தின்று விடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ? - 'ராம ராமா!' என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி!

இதனால் என்ன நடக்கிறது? - எங்களுக்கு வேண்டியதை நாங்கள் உங்களிடமிருந்து தட்டிப் பறித்தே தின்ன வேண்டியிருக்கிறது.

நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்று கொண்டிருக்கிறீர்கள்!

இது உங்கள் பிறவிக் குணம். நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே கொடுத்தாலும் எதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேளையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற் போலேயே யாராவது பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்து தாராளமாக தருமம் செய்து விட்டு, 'நான்தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!' என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்!

'இருப்பவன் எதையும் எதிர்பாராமல் இல்லாதவனுக்குக் கொடுப்பது' என்ற ஒரு தருமத்தை மட்டுமாவது நீங்கள் அன்றிலிருந்தே கடைப்பிடித்து வந்திருந்தால், இன்று உங்களிடையே திருடர்களும் கொலைகாரர்களும் ஏன் உருவாகியிருக்கப் போகிறார்கள்?.

அல்லது 'இந்த உலகத்தில் காணும் எல்லாமே எல்லாருக்கும் சொந்தமானவை. இவற்றில் உனக்கு, எனக்கு என்று எதுவும் இல்லை' என்ற 'வேதாந்த' த்தை எங்களைப் போலவே நீங்களும் உண்மையாகவே கடைப்பிடித்து வந்திருந்தாலும் உங்களிடையே 'இருப்பவன்' என்றும், 'இல்லாதவன்' என்றும், இப்போது எவனும் இருந்திருக்க மாட்டானே!

போகட்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? - உங்களுக்குத் 'தன்னம்பிக்கை' இல்லாமற் போனதுதான்.

அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளுக்காவது இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?

அதுவும் இல்லை.

நான்தான் சில சமயம் உங்கள் வீட்டுக் கூரையின் மேல் உட்கார்ந்து கொண்டு உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறேனே! - நீங்கள் பல் தேய்ப்பதைப் பார்த்து விட்டு உங்கள் குழந்தை தானும் பல் தேய்க்க எண்ணிப் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கையில் எடுத்தால் போதும், 'வேண்டாண்டா கண்ணு உனக்குத் தேய்க்கத் தெரியாது. இப்படி கொண்டா, நானே தேய்த்து விடுகிறேன்!' என்று நீங்களே அதற்குப் பல் தேய்த்து விடுகிறீர்கள். குளிக்கப் போனால் உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!' என்று நீங்களே அதைக் குளிப்பாட்டி விடுகிறீர்கள். சாப்பிடப் போனால், 'உனக்குத் தெரியாதுடா, இப்படி வா' என்று நீங்களே அதற்கு ஊட்டி விடுகிறீர்கள். உடை அணிந்து கொள்ளப் போனால் 'உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!' என்று நீங்களே அதற்கு உடை அணிவித்து விடுகிறீர்கள்.

எல்லாம் முடிந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது 'அப்பா! பென்சில் வாங்க வேண்டும். காசு தா? என்று கேட்டாலோ, 'உனக்கு என்ன தெரியும், பென்சில் வாங்க? வா நானே வாங்கித் தருகிறேன்!' என்று அவனைக் கையோடு கடைக்கு அழைத்துப் போய்ப் பென்சில் வாங்கித் தந்துவிட்டு, 'பார்த்துப் போ, பத்திரமா போ! பார்த்துப்போ, பத்திரமா போ!' என்று ஆயிரம் 'பார்த்து'களும், ஆயிரம் 'பத்திர'ங்களும் சொல்லி அனுப்பி விட்டு வருகிறீர்கள். முடிந்தால் பள்ளி வரை சென்று அவனை அங்கே உட்கார வைத்த பின்னரே நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள்.

அதாவது, எடுத்ததற்கெல்லாம் 'உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிச் சொல்லியே அவனை ஒன்றும் தெரியாதவனாக வளர்த்து, எதற்கும் தன்னை நம்பி வாழாமல் பிறரை நம்பி வாழக் கூடியவனாக அவனை உருவாக்கி விட்டு விடுகிறீர்கள்!.

ஓ மனிதா ! என்னையும் என் குட்டியையும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ? - 'ஐயோ, குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே! தவறிக் கீழே விழுந்து விடுமே!' என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? - என் முதுகைத் தன் கால்களால் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, அடி வயிற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். நானோ அதைக் குனிந்து கூடப் பார்க்காமல் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் இரை தேடித் தாவிக் கொண்டே இருப்பேன். அப்படித் தாவும்போது, 'பத்திரம், கெட்டியாகப் பிடித்துக் கொள்,' என்றோ 'விழுந்துவிடப் போகிறாய், ஜாக்கிரதை!' என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா? - மாட்டேன். தன்னைத் தானே தான் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 'என்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்' என்ற எண்ணம் அதற்குள் எழுந்து விட்டால், பிற்காலத்தில் அது தன்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?

இப்படிச் செய்வதால், 'எனக்கு அதன் மேல் அன்பே கிடையாது' என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். உண்டு. நானும் உங்கள் வீட்டுப் பெண்களைப் போல அதை என் முன்னங்கால்களால் அணைத்துப் பிடித்துக் கொண்டு பால் கொடுப்பதுண்டு - ஆனால் எதுவரை? - அதற்கு இந்த உலகம் தெரியும் வரை. தெரிந்த பின்? - எதற்கும் பிறரை அது ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எதிர்பார்க்க விட வேண்டும்?

புலி இருக்கிறதே புலி, அதற்கு எங்களைக் கண்டால் வெல்லம். நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அது எங்களைச் சுற்றிச் சுற்றி வரும். சில சமயம் அது எங்களைப் பிடித்துத் தின்ன மரத்தில் கூடத் தாவும். அதற்குப் பயந்து நாங்கள் வானளாவி வளர்ந்துள்ள மூங்கிலின் உச்சிக்குப் போய்விடுவோம். அந்த மூங்கிலோ எங்கள் கனத்தைத் தாங்காமல் 'ஸ்பிரிங்' போல் உதைத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாக வீசி வீசி ஆடும். அந்த ஆட்டத்தில் சில சமயம் எங்களை வளைத்துப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் எங்கள் குட்டிகள், பிடி தளர்ந்து கீழே விழுந்து விடுவதுண்டு. அப்போதும் அவற்றைக் காப்பாற்ற நாங்கள் விரைந்து செல்வோம் என்கிறீர்களா? - மாட்டோ ம். தட்டுத் தடுமாறி எழுந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்றுதான் அவற்றை விட்டு விடுவோம்...

இம்மாதிரி சமயங்களில் அவை காணாமற் போனால் கூட அவற்றைத் தேடி நாங்கள் அலைவது கிடையாது. ஏனெனில், என்றாவது ஒருநாள் அவையே எங்களைத் தேடி வந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவற்றைத் தேட மாட்டோ ம் என்பதும் அவற்றுக்குத் தெரியும்.

மனம் விட்டுச் சொல்கிறேனே! இயற்கையாக இல்லாத பந்தத்தையும் பாசத்தையும் உங்களைப் போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.

அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித் தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.

நன்றி : 'ஓ, மனிதா! ' (கட்டுரைத் தொகுப்பிலிருந்து)
ஆசிரியர் : விந்தன்
வெளியீடு : புத்தகப் பூங்கா

Friday, June 02, 2006

ஜனநாயகம் ஏன்? எப்படி? என்ன?

நம்ம மன்னர் இருக்காரு இல்லிங்க மன்னர் அவரு மொத்த அதிகாரத்தையும் வச்சிகிட்டு கொஞ்சமா இந்த நிலக்கிழார், மந்திரி, மத குரு அப்படின்னு சில பேர்களிடம் மட்டுமிருந்தது அதிகாரம்.

சி(ப)ல காலக்கட்டத்துக்கு பிறகு அதாங்க இந்த இயந்திர உற்பத்தி அதிகரிச்ச காலல்கட்டத்தாங்க, அப்போ இந்த முதலாளிகள் ( முதலாளித்துவம்) தொழிலாளர்களின் துணையுடன் மன்னர் கிட்ட இருந்த அதிகாரத்தை புடிங்கி கிட்டாங்க.

அப்படியே தொழிலாளர்களுக்கும் ஆட்சியில பங்கு தருவதாக சொல்லி நாடாளுமன்றம், தேர்தல், இதன் அங்கத்தவரை தேர்தெடுக்கும் முறை அப்படின்னு சொல்லி அதாங்க இந்த
ஜனநாயக முறை அத கொண்டுவந்தாங்க.

இதல பாருங்க இந்த நாகரிகமான தேர்தல் முறையல வயதுவந்த ஆண்களூக்கு மட்டுமே முதல்ல வாக்குரிமை இருந்தது அப்புறம் இந்த நூற்றாண்டுல தான் பெண்களுக்கான வோட்டுரிமை.

இத்தகைய ஜனநாயகம் என்னன்னா முன்னேற்றமான நாகரிகமான அரிசியல் முறையாம். ஏன்னா இத்தகைய ஆட்சி பெரும்பான்மையினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாட்சே.
பெரும்பான்மையினர் சொன்னா அதுவே நீதி அதுவே மரபு.

அப்படியே இந்த மொழி,இனம்,நிறம்,மதம்,சாதி, தொழில்,பால்நிலை சார்ந்த சிறுபான்மையிரான மக்களை ஒடுக்குவது பெரும்பான்மையினர் நீதியாகிறது, அஃதே ஆட்சியின் நீதி.