Thursday, April 27, 2006

சினிமா சினிமா

வயதிலிருந்து ஈர்ப்பான விடயம் சினிமா.

புத்தகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அதிலே நானும் உலவி வந்து கற்பனையில் இருந்தபோது,நிஜத்துக்கு மிக அருகாமையில், கண்களால் பார்த்து, காதால் கேட்டு உறவாடி படபடக்க, மகிழ சலனப்பிம்பங்களை உருவகிக்கும் சினிமா என்னுள் ஏற்படித்திய ஈர்ப்பூம்,ஆச்சரியமும் ஆலாதியானது.

இன்னவரைக்கும் அந்த ஈர்ப்பு குறைவேயில்ல, சிலமணி நேரமே திரையில்
வாழ்கிற அந்த நிழ்களின் பாதிப்பு சில நாட்களாவது இருக்கும் சிலது இன்னும் இருக்கு. அரங்கிலிருந்த திரையில் பார்தத சினிமாக்கள் போல சினிமாவில் உள்ளே இருந்து பார்ததும் உண்டு.

முதலில் சினிமாவின் ஈர்ப்புக்காக பார்தத சினிமாக்கள் நாளடைவில் அதன்
கதையும் கதாபாதிரங்களும் அனர்தமாய் தோன்றின.விரைவில் நல்ல
சினிமாக்களை தேடி பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி நான் பார்தத சினிமாக்களை என் பார்வையில இங்க எழுதலாமுன்னு இருக்கேன்.

முடிக்கிறதுக்கு முன்னே..

சில வருடங்களுக்கு முன்னே உலகச் சினிமாக்களை ஆராய்ந்து போது
அனைத்து சினிமாவிலும் பொதுவான ஒரு விடயம் கண்டுபிடிச்சாங்க அது
என்ன அப்படின்னா "நல்லது ஜெய்க்கனும் கெட்டது தோக்கனும்"
அப்படிங்கிறதுதான். சரிதானுங்களே.

Wednesday, April 26, 2006

மனித தலையளவு பருப்பு உண்ணும் மனிதர்களும்

சில மாதங்களுக்கு முன் தின்ணையில் நரேந்திரன் எழுதிய மார்க்கோ போலோ கட்டுரை படிச்சதிலிருந்து வலையில் தேடி இப்பதான் கிடைத்தது "மார்க்கோ போலோ பயணங்கள்" pdf.

நிறைய சுவாரசியமான, ஆச்சரியமான தகவல்களோடு நல்லாவே இருந்தது. மேல தலைப்புல இருக்கற விடயம் கூட மார்க்கோ போலோவின் தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள்தான்.

மனித தலையளவு பருப்பு - தேங்காய்.
கருங் எரிக் கற்கள் - நிலக்கரி.

ஏனோ அவருடைய தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள் எல்லாம் மலபார் அல்லது மாபார் ராஜியம்ன்னு குறிப்பிடுரதும் அதுனோட ராஜா சுந்தர் பாண்டித் தேவர்ன்னு சொல்லியிருக்கிறதும் குழ்ப்பமா இருக்கு. பாண்டியர்கள் ஆண்ட பகுதியாக இருக்குமோ ? தெரியல.

"மாபார்" ங்க்ற பெயர்க்கூட அரபியர்கள் அழைத்ததாக சொல்ரார். அரபியரகளை அந்த ராஜியத்தில யவனர்கள் என்று அழைத்ததாக குறிப்பெடுத்துறுக்கிறார். அரபியில் "மாபார்" ன்னா passage or ferry ன்னு அர்த்தமாம்.

அந்த ராஜயத்தின் முத்துகள் பற்றியும் முத்து குளிக்கிறதப் பற்றியும் ரொம்ப அழகா ஆச்சிரியத்தோட குறிப்பிடுகிறார்.சிலோன்(seilan அப்படி அவரு குறிப்பிடறது சிலோனதான்) என்கிற தீவுக்கும் மாபார் ராஜியத்தின் கடலுக்கும் இடையில எற்ப்படுற வளைகுடா பகுதியில அவுங்கு முத்து குளிக்கிறதா சொல்றார், ஏன்னா அந்த இடத்தில பத்து பன்னிரண்டு fathoms மேல கடல் ஆழம் இருக்காது சில இடத்தில் வெறும் இரண்டே fathoms ஆழ்ம்தான் இருக்குமாம்.

april மாதமும், may மாததில பாதி நாட்களும் தாம் அவுங்க முத்துக்குளிக்கிற நேரமாம். சரியா அந்தநேரத்தில தங்களோட பெரிய கப்பல்ல கிளம்பி BETTELAR( எந்த இடத்த சொல்றாரோ??) இடத்தில நங்கூரம் போட்டு அங்கிருந்து அருவது மயில் வளைகுடால உள்ளே சிறுப்படகுல போவாங்களாம்.

முத்துக்குளிக்கிறவங்க எல்லாம் கூலிங்கதானாம். இந்த நாப்பது சொச்ச நாளிக்கும் கூலிக் குடுத்து இவஙகள அழச்சிட்டுப்போறது வியாபரிகள் தான். இதுல கிடைக்கிற முத்துல பத்துல ஒரு பங்கு ராஜாவுக்கு.
சிறுசிறு படகுலப்போய் இந்த கூலிகள நாலிருந்து பன்னிரண்டி fathoms ஆழம் கடல்ல முழ்கி கிடைக்கிற முத்துகள இடுப்புல இருக்கிற சுருக்கு பைல போட்டு, தம் பிடிக்க முடியலனா மேல வந்து முச்சிவிட்டு திருப்பவும் முச்ச அடச்சி ஒரு ஜம்.

நிறக. இது சுவாரசியமா இருந்த சொல்லுங்க தொடரலாம் :-)

முடிக்கிறதுக்கு முன்னே..
நரேந்திரன் கட்டுரையின் கடைசி பத்தி..

மார்கோ போலோ எழுதியவற்றை அனைவரும் நம்பி விடவில்லை. வெனிஸ் நகரத் தெருக்களிலே அவர் நடந்து செல்கையில், சிறுவர்கள் அவரைப் பின் தொடர்ந்து, 'மார்கோ போலோ இன்னொரு பொய் சொல்லு! ' என்று கேலி செய்வார்களாம். மார்கோ போலோ சொன்னவை அனைத்தையும் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சாதாரண வெனிஸ் நகரத்து மனிதர்களால் புரிந்து கெ ாள்ள இயலவில்லை. அவரின் மரணத்திற்குப் பின்னால் (ஜனவரி 8, 1324) வெனிஸ் நகரக் கோமாளிகள் மார்க்கோ போலோவைப் போல உடையணிந்து, நம்பவியலாத பல கதைகளைச் சொல்லித் திரிந்தார்களாம்.

மரணப்படுக்கையில் இருந்த மார்க்கோ போலோவை அணுகி, 'இப்பொழுதாவது நீங்கள் சொன்னவை அனைத்தும் பொய் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்பொழுதான் உங்களின் ஆத்மா சாந்தியடையும் ' என வேண்டிய அவரின் நண்பர்களுக்கு அவர் சொன்ன, 'I have not told half of what I saw ' என்ற பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

Wednesday, April 19, 2006

ஓட்டு போடுவதற்கு முன்

உங்கள் தொகுதில் உள்ள வேட்பாளர்களை பற்றிய விவரங்களை முடிந்த அளவுக்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

பழய ரவுடி, அடியாள் போன்ற வேட்பாளரை தவிருங்கள். வேறு வழியே இல்லையா, 49ஒ பிரிவை பயன்படுத்துங்கள்.

ஏற்கனவே அரசியலில் பொது வாழ்வில் உள்ளவரா, அவரோட செயல்பாடுகளை நினைவில் கொள்ளுங்கள்.

கட்சி அபிமானத்தைவிட உங்க தொகுதி வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

எளிதில் அனுககூடிய வேட்பாளரா என்றுப் பாருங்கள்

நல்ல பேச்சாளரை விட செயல்ப்படுவரை தெரிவு செய்யுங்கள்.

நடிகர் நடிகை என வெறும் கவர்ச்சிக்கு மட்டும் அதரிக்காதிர்கள்.

ஒட்டு போடுவதற்காக கொடுக்கும் குடம், பணம் என்று எதுவானாலும் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஒட்டு அதன் பொருட்டு போடாதிர்கள்

எதிர்த்து ஓட்டு போடுவதற்கு பதில் ஆதரித்து ஓட்டு போடுங்கள்.

கண்டடிப்பாய் ஓட்டு போடுங்கள்.

சோறு

இருக்கும் சில்லரையல்லாம் கொடுத்து
வறுத்த சோறு வாங்கி திரும்புகையில் அவன்

சில்லரைக் கேட்டு கையெந்தியவனிடம்
இயலாமையாய் சோற்றைப்பகர வினவியபோது
மறுதலித்தான் பசியோடு
தனக்கு சோறுப் பிடிக்காது என்று

வருடங்களுக்கு முன் நடந்தவைதான், இன்றும்
நினைவாடுகிறான் என்னோடு.

ஒரு மதியம் புழுக்கத்தால்
வெளியே அமர்ந்து சோறு உண்ணுப்போது
வருகிறான் அவன் தன் வழி தொலைத்து
யாரையும் அறிந்திருக்காமல்.

தன்மானம் விழுங்கி, என் கண்களை தவிர்த்து
ஈனக்குரலில் பகருகிறான் தன் கழிவிரக்கத்தை என்னோடு
தன் வயிறு கடைவதையும், பாதம் எரிவதையும்
பசியாரத அவனின் பல இரவுககளையும்.

என் சோற்றில் பங்குதர முன்வந்தபோது நன்றியுரைத்து
மறுதலித்தான் தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

சோகமாக நின்ற அவனைய பார்த்து புன்னகைத்தேன்
என் உண்மையான அவனுக்கான் அக்கரைய உணர்த்த
இருவருக்கும் போதுமானளவு இருக்கிறது என்றும்
வேண்டாம் என்றான்
தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

அதன்பின் அவனை அங்கும் இங்கும் பார்க்குமோதல்லாம்
அவன் சில்லரை யாசித்தான்
அவனுக்காக சிறு பிரத்தனைகள் செய்தேன்
அவன் பசிகளற்ற இரவுகளுக்காகவும்
என் அவனுக்கான் அக்கரை அவன் உணரவும்

தெருக்களிலே உறங்குவதால் அவனக்கு
வருடங்களைவிட வயது கூடியது
அவன் வயிறு படாய்படுத்தினாலும் அவன் சோறு
உண்ணத் தாயாரில்லை.

எது அவனின் மறுதலித்த காரணி
சிறு வயதில் எப்பொதும் உண்ட சோறா?
பசிக் கொடுமையை விட அவனின் மகிழ்சியற்ற வாழ்வின் சோகமா?
அல்லது இதுபோலவா!

வாழ்வில் எல்லாம் இழந்தாலும்
தான் என்ன உண்ணவேண்டும் என்பதை தெரிவு செய்யும்
உரிமையும் சுதந்திரமுமா?
அதன் பொருட்டே
தனக்கு ஒவ்வாவது சோறு என்றதும்.

Tuesday, April 18, 2006

மாநில சுயாட்சி, திமுக, என் சந்தேகங்கள்

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மாநில சுயாட்சி சாத்தியமா?

ஜிவ நதிகள் இல்லாத தமிழகத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பக்கிட்டின் நிலை என்ன?

மொழி, இனம் என பல வகையில் உணர்ச்சிவயபடும்மக்களுக்கிடையே மாநிலங்களின் உறவுகள்?

ஊழல் மலிந்த நிர்வாக இயந்திரங்களிடம் அதிக அதிகாரம்?

Monday, April 17, 2006

சிறு நரிகளுக்கு நாட்டாமை?

சூது,வஞ்சகத்தின்
இருப்பிடமாக தெரிகின்றன
மனிதர்களின் கணகளுக்குக்
சிறு நரிகள்.

எதிரி, நன்பன்
வஞ்சகங்களின் உரையாடல்களில்
எப்படியாவது நுழைந்துவிடுகிறது
சிறு நரிகள்.

சாயம் வெளுத்துப்போச்சு டும் டும்
என சாயம் புசியவர்களின்
கேலிப் பொருளாய்
சிறு நரிகள்.

காடுகளில் பெருச் சிங்க, புலி
கூட்டங்களின் ஊடே இரைத் தேடும்
சிறு நரிகளுக்கு ஏதிராய
எராளமாய் பழமொழிகள்.

நரிக்கு நாட்டாம வந்தா?
என்று கூடக் கேட்கிறார்கள்.
தேவைதானா சிறு நரிகளுக்கு
நாட்டாமை?

Friday, April 07, 2006

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்?
அதில் பகுத்தறிவின் தாக்கம்?
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை.

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்
அதில் பகுத்தறிவின் தாக்கம்
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட