Wednesday, April 19, 2006

சோறு

இருக்கும் சில்லரையல்லாம் கொடுத்து
வறுத்த சோறு வாங்கி திரும்புகையில் அவன்

சில்லரைக் கேட்டு கையெந்தியவனிடம்
இயலாமையாய் சோற்றைப்பகர வினவியபோது
மறுதலித்தான் பசியோடு
தனக்கு சோறுப் பிடிக்காது என்று

வருடங்களுக்கு முன் நடந்தவைதான், இன்றும்
நினைவாடுகிறான் என்னோடு.

ஒரு மதியம் புழுக்கத்தால்
வெளியே அமர்ந்து சோறு உண்ணுப்போது
வருகிறான் அவன் தன் வழி தொலைத்து
யாரையும் அறிந்திருக்காமல்.

தன்மானம் விழுங்கி, என் கண்களை தவிர்த்து
ஈனக்குரலில் பகருகிறான் தன் கழிவிரக்கத்தை என்னோடு
தன் வயிறு கடைவதையும், பாதம் எரிவதையும்
பசியாரத அவனின் பல இரவுககளையும்.

என் சோற்றில் பங்குதர முன்வந்தபோது நன்றியுரைத்து
மறுதலித்தான் தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

சோகமாக நின்ற அவனைய பார்த்து புன்னகைத்தேன்
என் உண்மையான அவனுக்கான் அக்கரைய உணர்த்த
இருவருக்கும் போதுமானளவு இருக்கிறது என்றும்
வேண்டாம் என்றான்
தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

அதன்பின் அவனை அங்கும் இங்கும் பார்க்குமோதல்லாம்
அவன் சில்லரை யாசித்தான்
அவனுக்காக சிறு பிரத்தனைகள் செய்தேன்
அவன் பசிகளற்ற இரவுகளுக்காகவும்
என் அவனுக்கான் அக்கரை அவன் உணரவும்

தெருக்களிலே உறங்குவதால் அவனக்கு
வருடங்களைவிட வயது கூடியது
அவன் வயிறு படாய்படுத்தினாலும் அவன் சோறு
உண்ணத் தாயாரில்லை.

எது அவனின் மறுதலித்த காரணி
சிறு வயதில் எப்பொதும் உண்ட சோறா?
பசிக் கொடுமையை விட அவனின் மகிழ்சியற்ற வாழ்வின் சோகமா?
அல்லது இதுபோலவா!

வாழ்வில் எல்லாம் இழந்தாலும்
தான் என்ன உண்ணவேண்டும் என்பதை தெரிவு செய்யும்
உரிமையும் சுதந்திரமுமா?
அதன் பொருட்டே
தனக்கு ஒவ்வாவது சோறு என்றதும்.

2 comments:

சந்திப்பு said...

பட்டினத்து ராசா கவிதையில் நான் வீக். இருப்பினும் முயற்சி செய்து இரண்டு முறை படித்தேன். நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் முயற்சி.

பட்டணத்து ராசா said...

நன்றி சந்திப்பு.