Thursday, April 27, 2006

சினிமா சினிமா

வயதிலிருந்து ஈர்ப்பான விடயம் சினிமா.

புத்தகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அதிலே நானும் உலவி வந்து கற்பனையில் இருந்தபோது,நிஜத்துக்கு மிக அருகாமையில், கண்களால் பார்த்து, காதால் கேட்டு உறவாடி படபடக்க, மகிழ சலனப்பிம்பங்களை உருவகிக்கும் சினிமா என்னுள் ஏற்படித்திய ஈர்ப்பூம்,ஆச்சரியமும் ஆலாதியானது.

இன்னவரைக்கும் அந்த ஈர்ப்பு குறைவேயில்ல, சிலமணி நேரமே திரையில்
வாழ்கிற அந்த நிழ்களின் பாதிப்பு சில நாட்களாவது இருக்கும் சிலது இன்னும் இருக்கு. அரங்கிலிருந்த திரையில் பார்தத சினிமாக்கள் போல சினிமாவில் உள்ளே இருந்து பார்ததும் உண்டு.

முதலில் சினிமாவின் ஈர்ப்புக்காக பார்தத சினிமாக்கள் நாளடைவில் அதன்
கதையும் கதாபாதிரங்களும் அனர்தமாய் தோன்றின.விரைவில் நல்ல
சினிமாக்களை தேடி பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி நான் பார்தத சினிமாக்களை என் பார்வையில இங்க எழுதலாமுன்னு இருக்கேன்.

முடிக்கிறதுக்கு முன்னே..

சில வருடங்களுக்கு முன்னே உலகச் சினிமாக்களை ஆராய்ந்து போது
அனைத்து சினிமாவிலும் பொதுவான ஒரு விடயம் கண்டுபிடிச்சாங்க அது
என்ன அப்படின்னா "நல்லது ஜெய்க்கனும் கெட்டது தோக்கனும்"
அப்படிங்கிறதுதான். சரிதானுங்களே.

No comments: