Monday, April 17, 2006

சிறு நரிகளுக்கு நாட்டாமை?

சூது,வஞ்சகத்தின்
இருப்பிடமாக தெரிகின்றன
மனிதர்களின் கணகளுக்குக்
சிறு நரிகள்.

எதிரி, நன்பன்
வஞ்சகங்களின் உரையாடல்களில்
எப்படியாவது நுழைந்துவிடுகிறது
சிறு நரிகள்.

சாயம் வெளுத்துப்போச்சு டும் டும்
என சாயம் புசியவர்களின்
கேலிப் பொருளாய்
சிறு நரிகள்.

காடுகளில் பெருச் சிங்க, புலி
கூட்டங்களின் ஊடே இரைத் தேடும்
சிறு நரிகளுக்கு ஏதிராய
எராளமாய் பழமொழிகள்.

நரிக்கு நாட்டாம வந்தா?
என்று கூடக் கேட்கிறார்கள்.
தேவைதானா சிறு நரிகளுக்கு
நாட்டாமை?

No comments: