Wednesday, April 26, 2006

மனித தலையளவு பருப்பு உண்ணும் மனிதர்களும்

சில மாதங்களுக்கு முன் தின்ணையில் நரேந்திரன் எழுதிய மார்க்கோ போலோ கட்டுரை படிச்சதிலிருந்து வலையில் தேடி இப்பதான் கிடைத்தது "மார்க்கோ போலோ பயணங்கள்" pdf.

நிறைய சுவாரசியமான, ஆச்சரியமான தகவல்களோடு நல்லாவே இருந்தது. மேல தலைப்புல இருக்கற விடயம் கூட மார்க்கோ போலோவின் தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள்தான்.

மனித தலையளவு பருப்பு - தேங்காய்.
கருங் எரிக் கற்கள் - நிலக்கரி.

ஏனோ அவருடைய தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள் எல்லாம் மலபார் அல்லது மாபார் ராஜியம்ன்னு குறிப்பிடுரதும் அதுனோட ராஜா சுந்தர் பாண்டித் தேவர்ன்னு சொல்லியிருக்கிறதும் குழ்ப்பமா இருக்கு. பாண்டியர்கள் ஆண்ட பகுதியாக இருக்குமோ ? தெரியல.

"மாபார்" ங்க்ற பெயர்க்கூட அரபியர்கள் அழைத்ததாக சொல்ரார். அரபியரகளை அந்த ராஜியத்தில யவனர்கள் என்று அழைத்ததாக குறிப்பெடுத்துறுக்கிறார். அரபியில் "மாபார்" ன்னா passage or ferry ன்னு அர்த்தமாம்.

அந்த ராஜயத்தின் முத்துகள் பற்றியும் முத்து குளிக்கிறதப் பற்றியும் ரொம்ப அழகா ஆச்சிரியத்தோட குறிப்பிடுகிறார்.சிலோன்(seilan அப்படி அவரு குறிப்பிடறது சிலோனதான்) என்கிற தீவுக்கும் மாபார் ராஜியத்தின் கடலுக்கும் இடையில எற்ப்படுற வளைகுடா பகுதியில அவுங்கு முத்து குளிக்கிறதா சொல்றார், ஏன்னா அந்த இடத்தில பத்து பன்னிரண்டு fathoms மேல கடல் ஆழம் இருக்காது சில இடத்தில் வெறும் இரண்டே fathoms ஆழ்ம்தான் இருக்குமாம்.

april மாதமும், may மாததில பாதி நாட்களும் தாம் அவுங்க முத்துக்குளிக்கிற நேரமாம். சரியா அந்தநேரத்தில தங்களோட பெரிய கப்பல்ல கிளம்பி BETTELAR( எந்த இடத்த சொல்றாரோ??) இடத்தில நங்கூரம் போட்டு அங்கிருந்து அருவது மயில் வளைகுடால உள்ளே சிறுப்படகுல போவாங்களாம்.

முத்துக்குளிக்கிறவங்க எல்லாம் கூலிங்கதானாம். இந்த நாப்பது சொச்ச நாளிக்கும் கூலிக் குடுத்து இவஙகள அழச்சிட்டுப்போறது வியாபரிகள் தான். இதுல கிடைக்கிற முத்துல பத்துல ஒரு பங்கு ராஜாவுக்கு.
சிறுசிறு படகுலப்போய் இந்த கூலிகள நாலிருந்து பன்னிரண்டி fathoms ஆழம் கடல்ல முழ்கி கிடைக்கிற முத்துகள இடுப்புல இருக்கிற சுருக்கு பைல போட்டு, தம் பிடிக்க முடியலனா மேல வந்து முச்சிவிட்டு திருப்பவும் முச்ச அடச்சி ஒரு ஜம்.

நிறக. இது சுவாரசியமா இருந்த சொல்லுங்க தொடரலாம் :-)

முடிக்கிறதுக்கு முன்னே..
நரேந்திரன் கட்டுரையின் கடைசி பத்தி..

மார்கோ போலோ எழுதியவற்றை அனைவரும் நம்பி விடவில்லை. வெனிஸ் நகரத் தெருக்களிலே அவர் நடந்து செல்கையில், சிறுவர்கள் அவரைப் பின் தொடர்ந்து, 'மார்கோ போலோ இன்னொரு பொய் சொல்லு! ' என்று கேலி செய்வார்களாம். மார்கோ போலோ சொன்னவை அனைத்தையும் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சாதாரண வெனிஸ் நகரத்து மனிதர்களால் புரிந்து கெ ாள்ள இயலவில்லை. அவரின் மரணத்திற்குப் பின்னால் (ஜனவரி 8, 1324) வெனிஸ் நகரக் கோமாளிகள் மார்க்கோ போலோவைப் போல உடையணிந்து, நம்பவியலாத பல கதைகளைச் சொல்லித் திரிந்தார்களாம்.

மரணப்படுக்கையில் இருந்த மார்க்கோ போலோவை அணுகி, 'இப்பொழுதாவது நீங்கள் சொன்னவை அனைத்தும் பொய் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்பொழுதான் உங்களின் ஆத்மா சாந்தியடையும் ' என வேண்டிய அவரின் நண்பர்களுக்கு அவர் சொன்ன, 'I have not told half of what I saw ' என்ற பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

5 comments:

Badri Seshadri said...

வலையில் கிடைத்த pdf சுட்டியை எங்களுக்கும் கொடுக்கலாமே? நன்றி.

பட்டணத்து ராசா said...

பத்ரி, இளங்கோ வருகைகு நன்றி.
pdf link http://manybooks.net/titles/polom12411241012410-8.html

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு ராசா.. அந்த புத்தகத்திலிருந்து நீங்க தொடர்ந்து எழுதலாம்..

பட்டணத்து ராசா said...

வருகைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி, பொன்ஸ்.

Badri Seshadri said...

Thanks! I have downloaded the book now!