Friday, July 28, 2006

மரணம் விகிதங்களில்

இன்று உள்ள வளர்ந்த மருத்துவ உலகத்தில் எது மனிதனின் இறப்பு, மனிதனின் முடிவு என்பது வருடாவருடம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கின்றன். மேலும் வளர்ச்சி மேலும் தகவல்கள் மேலும் தீர்வுகள் என தினமும் மனிதர்களின் நின்ற இதயம் மற்றும் மற்ற உடல் உறுப்பின் செயலிழக்கங்களில் இருந்து மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்கபடுகிறார்கள்.

இறப்பு என்பது உடலியல் செயலிழக்கம். ஒரு கோலின் இறப்பை போல ஒரு நட்சசத்திரத்தின்(star) இறப்பை போல இறப்பு என்பது பொருளியல் பிரச்சனை ( engineering problem ). இறப்பின் பிறகு ஆவியோ ஆன்மாவோ இறுபபதற்கான சாத்திய கூறுகள் இல்லை அதாவது ஆவியோ ஆன்மாவோ இயற்பியலின் விதிகளுக்கு உட்பட்டதில்லை ஆனால் மாலிக்கூல்ஸ்(Molecules) இயற்பியலின்
விதிகளுக்கு உட்பட்டது.

ஒரு சிஸ்டம் எப்போது இறப்பு நிலை அடைகிறது அதன் ஒவ்வொரு பாகமும் இறக்கும்போது பாகம் எப்போது இறப்பு நிலை அடைகிறது அதன் ஒவ்வொரு செல்(cell)லும் இறக்கும்போது. நமது உடலில் டிரில்லின் செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லும் பல ஆயிரம் மாலிக்கூல்களால் ஆனது. இந்த மாலிக்கூல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவகிக்கும் புரதங்கள். இந்த புரதங்கள் உருவகிக்கும் ரகசியம் டி.என்.ஏ நூல் ஏணியில் எழுதியுள்ளது.

மாலிக்கூலர் இன்ஜினியரிங் தரும் அறிவியலில் வரும் எதிர்காலத்தில் நம் உடல்கள் செயலிழக்கும் தங்கள் உறுப்புகளை தாங்களே சரி செய்து கொள்ளும் நுட்பத்தை தரலாம். இயற்பியலின் எந்த கோட்டுப்பாடுகளையும் உடைக்காமல் மாலிக்கூலர் இன்ஜினியரிங் நம் உடல்களுக்கு சாகா வரம் தரும்.18ம் நூற்றாண்டின் தத்துவ ஞானி ட்னிஸ் டிடெரொட் சிலைகளை
உயிர்பிக்கும் வழிக்கண்டார் ஆச்சரியமாக இருக்கிறதா ஆமாம் சிலைகளை இடித்து பொடிப்பொடி துகுள்களாக உரமாக மாற்றினார். அந்த உரத்தை கொண்டு தானியங்களையும் கீரைகளையும் விளைவித்து உணவாக்கி உயிர் வளர்த்தார். இதே எளிமையான வழியத்தான் மாலிக்கூலர் இன்ஜினியரிங் சொல்கிறது சிலையை மாலிக்கூல்களாக பிரித்தெடுத்து மனித மாலிக்கூல்களாக உருவகித்தால் உயிர் அற்றது உயிர் பெறுகிறது.

unstack the statue molecules and restack them as man molecules.along the way you brink the dead to life.

மாலிக்கூலர் இன்ஜினியரிங் தரும் இந்த அறிவியல் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மலிவாக ஆகுவதற்கு முன் நாம் இறந்து போகலாம். ஆனால் வரும் காலங்களில் மனிதன் நோயவாய்பட்டோ அழிகியோ இறக்க போவதில்லை. விபத்துகளாலோ அல்லது விரும்பியோ தான் இறந்து போகலாம். இந்த மாதிரி (தற்)கொலைகளை சட்டம் அனுமதிக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

3 comments:

Muthu said...

ராசா,

ரொம்ப ஆள் ஆச்சே...

இது ஒரு நல்ல அறிவியல் கட்டுரை.நன்றி.

பட்டணத்து ராசா said...

நன்றி முத்து. இங்கதான் இருக்கேன், ஆனா பின்னூட்டம் தான் கிடையாது. சோம்பேறித்தனம் தான் :-)

Muthu said...

இந்த டெம்பிளெட் நல்லா இருக்கு ராசா...