Monday, February 26, 2007

வந்தியதேவனும் பந்திய குதிரையும் (சோதனை பதிவு)

வந்தியதேவனுக்கு அவன் பெயர் பிடிக்காது, சின்ன வயதிலிருந்தே ஏம்மா இப்படி பெயர் வச்சேன்னு கேட்டு கேட்டு அலுத்துக்குவான். கல்கி, ராஜா, குதிரை இப்படி அம்மா சொன்ன எதுவும் அவனுக்கு ஒப்புதல் இல்ல.

மத்த நாள் எப்படியோ சனி ஞாயிறு வந்துட்டா பள்ளிகூடம் போகறது பிடிக்கும் காலையில வந்து மைதானத்துல விளையாட ஆரம்பிச்சா மதியம் அப்படியே மரத்தடியில தூக்கம். தூக்கமுன்னா தூக்கம் வந்தியதேவா வந்தியதேவான்னு அம்மா கூப்பிட்டு மதிய சோறு ஞாபக படுத்துற வரைக்கும் அப்படி ஒரு தூக்கம்.

இதோ ஞாயிறு, பள்ளிகூடத்துக்கு கிளம்பியாச்சு. சிறிது நேரத்துக்கு மேல வெயில் அதிகமாக, மரத்தடியில் வந்து அமர்ந்து அந்த பறந்த மைதானத்தை வேடிக்கை பார்க்கும் போது தான் அந்த அந்த குதிரை மைதானத்தில் நுழைந்தது.

முன்பே அவனுக்கு தெரிஞ்ச குதிரைதான் ஒரு முறை சுந்தரோட மைதானத்தில் விளையாடியபோது சுந்தர் பந்தயம் கட்டி சவாரி செய்த குதிரை தான். தானும் வீராப்பா சவாரி செய்ரேன்னு அது மேல ஏறி பிடிக்க ஏதும் இல்லாம அதோட பிடரிய பிடிக்க குதிரை தறிக்கெட்டு ஓடி தள்ளி விட்டது ஞாபகம் வந்து போனது.

2 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இது? தொடர் கதையா?

பட்டணத்து ராசா said...

sorry முழுசா முடிக்கமா போட்டுடேன், layout testing " :-))