Wednesday, January 10, 2007

சாம்பார் ஷாஜி மற்றும் ஜெமினி கணேசன்

ஒரு முன்னிரவில் டிவீயில் மிஸ்ஸியம்மா படம் பார்த்துக்கொண்டிருந்த போது ஏன் ஜெமினிக்கு சாம்பார் ன்னு செல்ல பெயர்? தெரியுமா? கேட்டேன் எப்பவும் எதுக்கும் பதில் சொல்கிற மணி. டேய் நமக்கு மெய்ன் சாப்பாடு சோறுதான். அதோட சேர்த்து அடிக்கிறதுதான் சாம்பார் அதுபோல சாவத்திரி மெய்னா நடிக்கிற படத்தில் எல்லாம் சைடுல சேர்ந்த்து நடிக்கிறது சாம்பார் தான் சொன்னான். அப்படியா?

சரி சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம். தமிழர்களின் தினசரி உணவாகி போன சாம்பாருக்கு எப்படி அப்படியொரு பேரு?

தஞ்சாவூரை ஆட்சி செயத மராத்திய மன்னர் ஷாஜி என்பவர்தான் சாம்பாரை கண்டுபிடித்தார். பருப்புடன் புளி கரைசலை சேர்த்து அவர் குரங்குபிடிக்க(மன்னருக்கு இதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா?) அதுக்கு அவர் உறவினர் பெயர் சாம்பாஜி 'யை வைக்க சாம்பார் ஆனது.

அதுக்கு அப்புறம் நம்ம அளுங்க பலபல டைப் சாம்பாரை வச்சு அசத்திகிட்டு இருக்காஙக. தமிழனக்கு சாம்பார் வைத்து கொடுத்த மராத்திய மன்னரே ஷாஜி. நீன் புகழ் வளர்க.

No comments: