Monday, February 01, 2010

ஆயிரத்தில் ஒருவன், விமர்சனம் அல்ல..

திரு செல்வராகவன், எல்லாத்தையும் சகிச்சிக்கலாம், ஆன வரலாறு யாருக்கும் தெரியாது சொன்னது too much.. half cooked is more dangerous

Friday, October 26, 2007

அம்மு நீ

உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

Wednesday, July 25, 2007

கிணற்று தவளையும் , கடவுளும்




ஒவ்வொரு நாளும் அதிகமாகிறது
மேலிருந்து விழும் காசுகள்

வழவழப்பான குழாங்கற்களை விட
கூரான காசுகள் நிறம்பி தலும்புகிறது கிணறு

மேலிருந்து விழும் சல்லி காசுகளுக்கு பயந்து
சுவற்றோரம் தேம்பியே நிற்க வேண்டியிருக்கிறது

கடவுளுடனான எந்த பரிவர்த்தனை இங்கு
நடைபெற வாய்பேயிலலை. இங்கு கடவுளே
இல்லை. நிற்க

நான் கிணற்று தவளைத்தான் அதனால் தான்
சொல்லிகிறேன் இந்த கிணற்றில் கடவுள்
இல்லை.

Monday, May 07, 2007

எல்லாம் தானாய் மாறும் என்பது பழைய பொய்யடா.


எல்லாம் தானாய் மாறும் என்பது பழைய பொய்யடா.

Thursday, April 19, 2007

என் தனிமை.

வலைபதிவு கூட்டியில்
படித்து எழுதியும்
எழுதி படித்தும்
தலைபிராண்டி வலை மேய்ந்து கொண்டிருக்கும்
ஒற்றை வாசகனின்
துக்கங்களோடும்
புரிதல் இல்லா பின்நவீனத்துக்கப்பால்
அடர்ந்த கருத்தியலில்
தள்ளி நின்று
அதன் வேடிக்கை கொண்டுவரும்
சந்தோசங்களோடும்
நட்சத்திரங்களுக்கூடாய்
எதிலும் ஒட்டாது
(வலை)மேகம் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது
என் தனிமை.

Wednesday, March 28, 2007

முதல் வெண்பா





சுவாசித்து கொண்டு ஆயுள் கடந்தாலும்
நேசிக்க ஓர்யுவதி வேண்டி - நான் சுநுக்க
கட்டுமரம் மீதமர்ந்து வந்த நீனக்கு
காண கிடைக்காத கணா.


பி.கு
ஆள பார்த்த ஜோர்ல எதோ எழுதிட்டேன், அங்க இங்க சீர் தட்டுனா பொருத்தருள வேண்டும் பெருந்தலைகளே :-)