Thursday, December 29, 2005

இருட்டின் மேல் கருப்பாய்




பயம் எறும்புகள் போல் என் படுக்கையில் மெல்ல ஊர்ந்து என் கால்கள் வழியே ஏறி என்னை முழுவதுமாய் பூசிக்கொள்கின்றன.

இறுக்க முடிய நடுங்கும் இமைகளை மீறி. . ஜன்னல் வழியே நழுவி என் அறைக்குள் விழுகிறது.

எந்த சலனமும் இல்லாமல் அது நீள்கிறது. சற்றே தையிரியமுற்று இமை விலக்குகிறேன், அது என் படுக்கையின் தொட்டுவிடும் துரத்தில்.

என் இருப்பை அலட்சியம் செய்து படுக்கையின் காலில் தேங்குகிறது..

சலனமுற்று அஞ்ச முயற்சிக்கிறேன், அது படுக்கையின் காலில் இருந்து மெல்ல நழுவி, பின் வேகமுற்று படுக்கையின் மீது ஏறி என்மீது இருட்டின் கருப்பாய் பூசிக்கொள்கிறது.

என் திறந்த வாயின் வழியே பய எறும்புகள் வெளியேறுகின்றன.

Thursday, December 22, 2005

The Alchemist,
Paulo Coelho

படித்தது



கனவுகள், பட்ச்சியின் குறியிடுகள், சகுனங்கள், சாகசங்கள் என ஒரு பரந்த அறிவும், ஆளுமையும் உள்ள முனியின் எதிரொலியாக வாசகனை புகைப்போல சுழ்ந்து கொள்கிறது, "The Alchemist" புதினம்.

கனவும், கனவுகளை விடாது துறத்தும் சந்த்யகோ ங்கற பையன் முலமா நம்மோட உண்மையான மகழ்ச்சியும், முழுமையும், படைப்பின் நோக்கமாக நமக்கு விதிக்கப்பட்டவைகளை கனவுகளின் ஊடாகவும், நிகழ்வுகளாகவும், சகுனங்களாகவும் இயற்கை அடையாளம் காட்டுங்கறத இந்த நாவல் நெடுக சம்பவங்களா அடிக்கி இருக்குறார் நாவலாசிரியர்.

சந்த்யகோவின் எகிப்து பிரமிட் புதையல் கனவும், அந்த தேடல் பயண நிகழ்வுகளின் முலம், நம் வாழ்வின் கனவுகளும், அதை அடைய படும் இடர்கள், பட்டறிதல், பயணம், உலகம் பற்றியான புரிதல்,சுயத்தேடல் என வாழ்வியல் தத்துவங்கள் எளிமையான நடையில் கதை நெடுக.

சான்டியகோ, அவனோட புதையல் தேடல்லில் உலகத்தின் சிறப்பையும், அற்புதமான மனிதர்களையும், *அல்கெமிஷ்ட்* 'யும் சந்திக்கிறான். முடிவில் புதையல அவனக்கு பிடித்த அந்த பழைய சர்ச் 'லே கண்டு எடுக்கிறான்(treasure lies where your heart belongs).